Posts

Image
ஒரு தலைமுறையின் முதுகெழும்பை உடைக்கும் பாரிய முட்டுக்கட்டையாக போதைப் பொருள் பாவனையானது இன்று சமூகத்தில் இலையோடியுள்ளது என்பது குறிப்பான விடயமாகும். ஒரு குழந்தை  பிறந்து சமூகத்துக்கு வரும் முன்பே இன்று அதனது வாழ்க்கையில் போதைப் பொருள் வலையமைப்பு என்பது பாதித்துள்ளது என்பது யதார்த்தமானது. தலைநகரைச் சூழ உள்ள பகுதிகளை ஆட்கொண்டிருந்த போதைப்பாவனையானது அன்மைக் காலமாக நாடு முழுவதும் பரவி  சமூகத்தின் சகல துறைகளிலும் ஊடுருவி  தாக்கி சின்னாபின்னப்படுத்தியுள்ளது என்பது  கவலைக்குரிய விடயமாகும்.  நாட்டின் பொறுப்பான துறைகள் முதற் கொண்டு முக்கிய அதிகாரிகளைக் கூட விட்டு வைக்காது இதன் வியாபிப்பானது விரிந்து சென்றுள்ளது.  2022 இல் போதைப்­பொருள் ஒழிப்புப் பிரிவு,பொலிஸ் நிலை­யங்கள் மற்றும் ஏனைய நிறு­வ­னங்கள் ஒன்­றி­ணைந்து நாட­ளா­விய ரீதியில் மேற்­கொண்ட சுற்றி வளைப்­பு­க­ளை­ய­டுத்து ஹெரோயின் 1548 கிலோ கைப்­பற்­றப்­பட்­டது. இந்த ஹெரோயின் தொகை­யுடன் 46,258 சந்­தேக நபர்­களும் கைது செய்­யப்­பட்­டனர். இந்த புள்­ளி­வி­ப­ரங்­களை பொலிஸ் போதைப்­பொருள் ஒழிப்­புப்­பி­ரிவு வெளி­ய...